வணக்கம் .
நான் கா . காளிதாஸ் . வசிப்பிடம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை என்கிற கிராமம். வசிக்கவிரும்புவது தமிழீழத்தில். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியராக பணி. பிடித்தது ஈழம், தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன், ரஜினி படங்கள், இளையராஜவின் இசை, புத்தக வாசிப்பு. பிடிக்காதவை அந்தந்த கணங்களைப் பொருத்தது. பிடித்ததில் எப்போதும் மாற்றம் இல்லை. என்னைப்பொருத்தவரை ஆழி சூழ் உலகு அல்ல நட்பு சூழ் உலகு. முதல் பதிவு என்பதால் என்னைப் பற்றி. அடுத்தடுத்த பதிவுகளில் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
வருகைக்கு நன்றி.